சுற்றுச் சூழலிலுள்ள வைரஸினால் ஏற்படக் கூடிய கருப்பு பூஞ்சை: நோய் எதிர்ப்புச் சக்தி குறைவானோர் உயிரிழக்க நேரிடும்..!
அது சுற்றுச்சூழலில் காணப்படும் வைரஸ் மூலம் பரவக் கூடியது. நோய் எதிர்ப்பு சக்திமிகக் குறைவானோர் இந்நோய்க்கு உட்படுவார்களாயின் அவர்கள் உயிரிழக்கக் கூடிய வாய்ப்புக்கள் அதிகமாகும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
கொழும்பு தேசிய வைத்தியசாலை, குருணாகல் மற்றும் இரத்தினபுரி உள்ளிட்ட வைத்தியசாலைகளில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
உடலில் எந்த பாகத்தில் இந்த நோய் ஏற்படுகிறது என்பதை அடிப்படையாகக் கொண்டே இந்நோயின் அறிகுறிகளை குறிப்பிட முடியும்.
கருப்பு பூஞ்சை நோய் நுரையீரலில் கூட ஏற்படக் கூடும். நோய் எதிர்ப்பு சக்தி மிகக் குறைவாகக் காணப்படுபவர்கள் இந்நோயினால் அதிகம் பாதிக்கப்படக் கூடும்.
எனினும் இது ஒரு தொற்று நோய் அல்ல. சுற்று சூழலில் காணப்படுகின்ற வைரஸ் ஊடாகவே இந்நோய் பரவும்.
மாறாக மனிதர்களில் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவக் கூடிய நோய் அல்ல. நோய் எதிர்ப்பு சக்தி உடையவர்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டால் மருந்துகள் மூலம் அவர்களை குணப்படுத்த முடியும். எனினும் நோய் எதிர்ப்பு சக்தியற்ற அல்லது குறைவானோர் உயிரிழப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகும் என்று தெரிவித்தார்.
சுற்றுச் சூழலிலுள்ள வைரஸினால் ஏற்படக் கூடிய கருப்பு பூஞ்சை: நோய் எதிர்ப்புச் சக்தி குறைவானோர் உயிரிழக்க நேரிடும்..!
Reviewed by Author
on
September 15, 2021
Rating:
No comments:
Post a Comment