அண்மைய செய்திகள்

recent
-

கடலில் மூழ்கிய இந்திய மீனவரின் சடலம் மீட்பு

படகு மூழ்கியதில் காணாமற்போன இந்திய மீனவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் திங்கட்கிழமை இந்தியா - கோட்டை பட்டினத்தல் இருந்து புறப்பட்ட படகு எல்லை தாண்டி காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட போது, இலங்கை கடற்படையின் ரோந்து படகில் மோதியதில் நடுக்கடலில் மூழ்கியது.

 படகில் இருந்த மீனவர்கள் இருவர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் ஒருவர் காணாமற்போனார். படகு ஓட்டுநர் ராஜ்கிரனை இலங்கை கடற்படை தொடர்ந்து தேடி வந்த நிலையில் இன்று காலை காரைநகர் கடற்பரப்பில் மீட்பு குழுவினரால் சடலம் மீட்கப்பட்டது. உடல் தற்போது காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

கடலில் மூழ்கிய இந்திய மீனவரின் சடலம் மீட்பு Reviewed by Author on October 20, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.