அண்மைய செய்திகள்

recent
-

ஆசிரியரின் சம்பளங்களை வழங்க மாட்டேன் எனக்கூறிய ஆளுநரின் வீட்டின் முன் போராட்டம் நடத்தப்படும் - ஆசிரியர் தொழிற்சங்கம்

ஆசிரியரின் சம்பளங்களை வழங்க மாட்டேன் எனத் தெரிவித்த ஆளுநரின் வீட்டின் முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்படும் என ஆசிரியர் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. வடமேல் மாகாணத்தில் நாளை மற்றும் நாளை மறு தினங்களில் பாடசாலைக்கு சமுகமளிக்காத ஆசிரியர்களுக்கு நவம்பர் மாத கொடுப்பனவை வழங்காதிருக்கத் தீர்மானித்துள்ளதாக வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே தெரிவித்துள்ளார் என்று இலங்கை அதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பியசிறி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

 வடமேல் மாகாணத்தின் அதிபர் - ஆசிரியர்கள் குறித்த பாடசாலைகளுக்கு 21 ஆம் திகதி சமுகமளிக்காவிட்டால் அவர்களுக்கான நவம்பர் மாத கொடுப்பனவை வழங்காதிருந்தால் வடமேல் மாகாண ஆளுநரின் வீட்டின் முன்பாக குறித்த அதிபர் - ஆசிரியர்களுடன் அணி திரளவுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

ஆசிரியரின் சம்பளங்களை வழங்க மாட்டேன் எனக்கூறிய ஆளுநரின் வீட்டின் முன் போராட்டம் நடத்தப்படும் - ஆசிரியர் தொழிற்சங்கம் Reviewed by Author on October 20, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.