அண்மைய செய்திகள்

recent
-

திருமண வைபவம் உள்ளிட்ட சில நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதி!

புதிய சுகாதார நடைமுறைகளுக்கு அமைய சில கட்டுப்பாடுகளுடன் திருமண நிகழ்வுகளை நாளை (வெள்ளிக்கிழமை) முதல் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, மண்டபங்களின் அளவில் 25 சதவீதம் பூர்த்தியடையக் கூடிய விதத்தில் அதிகபட்சமாக 50 பேர் கலந்துகொள்ளும் அளவில் திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

 அத்தோடு, வெளிப்புற திருமணங்கள் வரவேற்கப்படுவதாகவும் அவற்றில் மது பாவனைக்கு அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் மரண சடங்குகளில் கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கை நாளை முதல் 15 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் சில விளையாட்டு நிகழ்வுகளை சுகாதார நடைமுறைகளுக்கு உட்பட்டு நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திருமண வைபவம் உள்ளிட்ட சில நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதி! Reviewed by Author on October 14, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.