அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் 'கொரோனா' தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு

மன்னார் மாவட்டத்தில் நவம்பர் மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் 16 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 358 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, இம் மாதம் 2 கொரோனா மரணங்கள் பதிவாகி உள்ளது என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார். மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று புதன்கிழமை (17) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,,,, மன்னார் மாவட்டத்தில் நவம்பர் மாதம் தற்போது வரை 358 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, இம்மாதம் 2 கொரோனா மரணங்கள் பதிவாகி உள்ளது.

 சராசரியாக நாள் ஒன்றுக்கு 22 நபர்கள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்படுகின்றனர். நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (17) மன்னார் மாவட்டத்தில் புதிதாக 30 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 13 தொற்றாளர்கள் மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும்,6 தொற்றாளர்கள் மன்னார் நகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும்,4 தொற்றாளர்கள் முசலி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் மேற்கொள்ளப்பட்ட எழுமாறான மற்றும் முதல் தொடர்பாளர்களுக்கிடையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

 மேலும் 3 தொற்றாளர்கள் மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலையிலும் முருங்கன்,பெரிய பண்டிவிரிச்சான் மற்றும் நானாட்டான் ஆகிய வைத்தியசாலைகளில் தலா ஒரு தொற்றாளர் வீதம் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இக் காலப்பகுதியில் தொற்று அதிகரிக்க காரணமாக காலநிலை மற்றும் சுகாதார நடைமுறைகளை மக்கள் கடை பிடிப்பதில் ஏற்பட்டுள்ள தளர்வு நிலை ஆகிய காரணங்களால் தற்போது தொற்று அதிகரித்துள்ளது.

 மன்னார் மாவட்டத்தில் 11 வைத்தியசாலைகள் மற்றும் 5 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் நாளாந்தம் எழுமாறான மற்றும் நோய் தொற்று உள்ளவர்களுக்கான ஆன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் நறுவிலிக்குளம் ஆயுர்வேத வைத்தியசாலையில் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றது.மக்கள் கொரோனா தொற்றில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு மக்கள் தங்களை சுகாதார வழி முறைகளை உரிய முறையில் கடைபிடிக்க வேண்டும். மன்னார் மாவட்டத்தில் முதலாவது தடுப்பூசியை 90 சத வீதமானவர்களும் 2 ஆவது தடுப்பூசியை 73 சதவீதமானவர்களும் பெற்றுக் கொண்டுள்ளனர்.பாடசாலை மாணவர்களில் 5599 பேர் இதுவரை தமது தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளனர். 

பாடசாலைக்கு செல்லாத ஆனால் பாடசாலை செல்லும் வயதுடையவர்களுக்கான தடுப்பூசி 1144 நபர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.3 ஆவது தடுப்பூசியை முன் கள பணியாளர்கள் 595 நபர்கள் பெற்றுக் கொண்டுள்ளனர். மேலும் மன்னார் மாவட்டத்தில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சிறிது அதிகரித்துள்ளது. இந்த வருடம் மொத்தமாக 33 டெங்கு நோயளர்களும்,நவம்பர் மாதத்தில் 6 டெங்கு தொற்றாளர்களும் மன்னார் நகர பகுதிக்குள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

மழையுடன் கூடிய காலநிலை காணப்பட்டமையால் அதிக அளவான வீடுகளைச் சுற்றி மழை நீர் தேங்கி காணப்படுகின்றமையினால் நுளம்பின் பெருக்கம் அதிகரித்துக் காணப்படுகின்றது. ஆகவே மக்கள் நுளம்பு பெருக்கம் உள்ள இடங்களை அடையாளம் கண்டு அழிப்பதோடு, நுளம்பு கடிக்கும் நேரங்களில் தம்மை பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகளை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம். காய்ச்சல் அறிகுறிகள் காணப்பட்டால் சுய சிகிச்சை பெற்றுக் கொள்வதை தவிர்த்து உடனடியாக வைத்தியசாலைகளுக்கு சென்று தம்மை பரிசோதித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகின்றோம்.என அவர் மேலும் தெரிவித்தார்.
                




மன்னாரில் 'கொரோனா' தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு Reviewed by Author on November 17, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.