கிறிஸ்துமஸ் கொண்டாட்ட அணிவகுப்பில் புகுந்த கார் - 5 பேர் பலி
ஆட்டம், பாட்டம், நடன நிகழ்ச்சிகளுடன் இசை கருவிகளை இசைத்தபடி வாகேஷா நகரின் முக்கிய சாலையில் நூற்றுக்கணக்கான மக்கள் அணிவகுத்து சென்றனர்.
அப்போது, சிவப்பு நிற கார் அணிவகுப்பு நடைபெற்றுக்கொண்டிருந்த சாலையில் வேகமாக வந்தது. அந்த கார் அணிவகுப்பில் சென்றுகொண்டிருந்த மக்கள் மீது அதிவேகமாக மோதியது. அணிவகுப்பு கூட்டத்திற்குள் புகுந்த கார் அங்கிருந்தவர்கள் மீது மோதி வேகமாக சாலையை கடந்து சென்றது.
கார் வேகமாக மோதியதில் அணிவகுப்பில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஒரு நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்தான் விபத்தை ஏற்படுத்தினாரா? என்பது குறித்து போலீசார் எந்தவித தகவலும் வெளியிடவில்லை.
கிறிஸ்துமஸ் கொண்டாட்ட அணிவகுப்பில் புகுந்த கார் - 5 பேர் பலி
Reviewed by Author
on
November 22, 2021
Rating:
No comments:
Post a Comment