மன்னாரில் அரச அதிகாரிகளின் தன்னிச்சையான முடிவால் தொடர்ந்தும் பாதிக்கப்படும் விவசாயிகள்-இலுப்பைக்கடவை விவசாயிகள் கவலை தெரிவிப்பு
அதிகாரிகள் பாதிக்கப்படும் விவசாயிகளின் ஆலோசனைகளை கேட்பது இல்லை எனவும் குற்றம் சாட்டுகின்றனர்.
இம்முறை கால்நடைகளால் சேதம் ஏற்படும் பட்சத்தில் அரச அதிகாரிகளோ பொறுப்பேற்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்துள்ளதுடன், கடந்த வருடம் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர், அரசாங்க அதிபர் ஆகியோர் சந்தித்து தமது பாதிப்புகள் பற்றி விளக்கி இம்முறை கால் நடைகளை கொண்டு வர அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி கூறியிருந்தோம் என அப்பகுதி விவசாய அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இம்முறையும் கால்நடைகள் வருவதையிட்டு மிகவும் வேதனை அடைவதாக தெரிவித்த அப்பகுதி விவசாயிகள் கடந்த வருடம் இவ்வாறு கால்நடை மேய்ப்பதற்காக நானாட்டான் பிரதேசத்தில் இருந்து சென்ற ஒருவர் தாக்கி யானை தாக்கி உயிரிழந்தார்.
நிரந்தர மேய்ச்சல் தரை இன்மையால் கால்நடை வளர்ப்பாளர்களும், இலுப்பைக்கடவை விவசாயிகளும் பாதிக்கப்படுகின்றனர்.
நீண்ட காலமாக தொடரும் மேய்ச்சல் தரை பிரச்சினைக்கு அரச அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் முடிவு எடுக்க முடியாமை இப்பிரச்சினைக்கு அடிப்படைக் காரணம் என தெரிவித்த பாதிக்கப்பட்ட விவசாயிகள், இந்த நிலை தொடருமாக இருந்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் போராட்டம் நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
மன்னாரில் அரச அதிகாரிகளின் தன்னிச்சையான முடிவால் தொடர்ந்தும் பாதிக்கப்படும் விவசாயிகள்-இலுப்பைக்கடவை விவசாயிகள் கவலை தெரிவிப்பு
Reviewed by Author
on
November 08, 2021
Rating:
No comments:
Post a Comment