எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 3,000 கோழி குஞ்சுகள் தீக்கிரை!
குறித்த கோழிப்பண்ணையில் சுமார் 35,000 குஞ்சுகளை அடைக்கக்கூடிய ஏழு கூடங்கள் உள்ளன. அதில் ஒரு கூடத்தில் தீப்பிடித்துள்ளது.
கோழி குஞ்சுகளுக்கு தேவையான வெப்பத்தை ஏற்படுத்த 37.5 கிலோகிராம் எடையுள்ள மூன்று எரிவாயு சிலிண்டர்கள் பொருத்தப்பட்டிருந்த நிலையில், அதில் ஒரு சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
எவ்வாறாயினும் நீர்கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினரும் பொலிஸாரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதுடன் சேத விபரங்கள் இதுவரை கணக்கிடப்படவில்லை.
பன்னல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 3,000 கோழி குஞ்சுகள் தீக்கிரை!
Reviewed by Author
on
December 24, 2021
Rating:
No comments:
Post a Comment