கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் படுகொலை
தலகஹகம, பெலிகைத்த வீடொன்றுக்கு அருகில் இருந்த நபர் ஒருவருடன் வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்த போதே தகராறு ஏற்பட்டுள்ளது.
இருவருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளதுடன், மோதலுக்கு அருகில் வீட்டில் இருந்த நபரின் மகனும் இணைந்து, குறித்த நபரை தாக்கியுள்ளார்.
இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளான நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அக்குரஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் படுகொலை
Reviewed by Author
on
December 23, 2021
Rating:
No comments:
Post a Comment