அண்மைய செய்திகள்

recent
-

இலங்கைக்கு சட்டவிரோதமாக படகில் செல்ல முயன்ற மல்லாவியை சேர்ந்த இளைஞன் தனுஸ்கோடியில் கைது.

தனுஷ்கோடி கடற்பரப்பினுடாக சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர் நேற்று (6) வியாழக்கிழமை இரவு மெரைன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் இருந்து விமானம் மூலம் தமிழகத்திற்கு வந்து தங்கி இருந்த இலங்கையைச் சேர்ந்த குறித்த நபர் விசா முடிந்ததால் சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கைக்கு செல்வதற்கு தனு;கோடிக்கு வந்துள்ளார்.

 சந்தேகத்திற்கிடமாக கடற்கரையில் நின்ற குறித்த நபர் குறித்து அப்பகுதி மீனவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்ப இடத்திற்கு வந்த மெரைன் பொலிஸார் குறித்த நபரை கைது செய்தனர். -கைது செய்யப்பட்ட நபர் மெரைன் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். -கைது செய்யப்பட்ட நபர் மல்லாவி பகுதியைச் சேர்ந்த சமிந்தன் (வயது-24) என தெரிய வந்துள்ளது.



இலங்கைக்கு சட்டவிரோதமாக படகில் செல்ல முயன்ற மல்லாவியை சேர்ந்த இளைஞன் தனுஸ்கோடியில் கைது. Reviewed by Author on January 07, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.