அண்மைய செய்திகள்

recent
-

சட்டத்தரணி வசந்தராஜ உயர்கல்வி நடவடிக்கைக்காக இத்தாலி நோக்கி பயணம்

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் மன்னார் பிராந்திய காரியாலயத்தின் விசாரனை அதிகாரியாகவும் அண்மையில் பதவி உயர்வு பெற்று திருகோணமலை மாவட்ட மனித உரிமை குழுவின் பிராந்திய பணிப்பாளராக கடமையாற்றி வருகின்ற சட்டத்தரனி வசந்தராஜ தனது உயர்கல்வி நடவடிக்கைக்காக  இத்தாலி பவியா பல்கலைக்கழகம் (university de pavia) நோக்கி பயணமாகவுள்ளார்


இந்த நிலையில் சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் சட்டத்தரணிகள்,ஊடகவியளாலர்கள் இணைந்து இன்றைய தினம் மன்னார் நகரில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் பிரிவு உபசார நிகழ்வு ஒன்றை ஒழுங்குபடுத்தியிருந்தனர்

குறித்த நிகழ்வில் சட்டத்தரணி வசந்தராஜ கெளரவிக்கப்பட்டதுடன் சிவில்சமூக பிரதிநிதிகள் மற்றும் சட்டத்தரனிகளால் நினைவு பரிசும் வழங்கி வைக்கப்பட்டது

சட்டத்தரணி வசந்தராஜ கடந்த 6 வருடங்களிற்கு மேலாக மன்னார்,வவுனியா முல்லைதீவு பகுதிகளில் மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரியாக பணியாற்றிய காலப்பகுதியிலேயே மன்னாரில் உப அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டது என்பதுடன் இவரது காலப்பகுதியில் பல வருடங்களாக தீர்கப்படாத மனித உரிமை முறைப்பாடுகளுக்கு சுமுகமான தீர்வுகள் வழங்கப்பட்டமை குறிப்பிடதக்கது


மன்னார் நகர் நிருபர்

13-02-2022









சட்டத்தரணி வசந்தராஜ உயர்கல்வி நடவடிக்கைக்காக இத்தாலி நோக்கி பயணம் Reviewed by NEWMANNAR on February 14, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.