அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் எரிவாயு (கேஸ்) இன்மையால் மூடப்பட்ட உணவகங்கள்

மன்னார் மாவட்டத்தில் நிலவி வருகின்ற எரிவாயு தட்டுப்பாட்டினால் அனேகமான உணவகங்கள் மூடப்பட்டுள்ளதுடன் பொது மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த ஒரு வார காலமாக மன்னாரில் எரிவாயு தட்டுப்பாடு நிலவி வந்த நிலையில் இன்றைய தினம் புதன்கிழமை அனேகமான உணவகங்கள் எரிவாயு நிறைவடைந்த நிலையில் கடைகளை மூடி வியாபார நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளனர் 

 அதே நேரம் வீடுகளில் எரிவாயுக்களை பயன்படுத்தும் மக்களும் எரிவாயு தட்டுப்பாட்டினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் இது ஒரு புரம் இருக்க தனியார் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசல் இன்மையால் வாகன உரிமையாளர்கள் பெரல்கள் மற்றும் கான்களுடன் எரிபொருள் நிலையங்களில் காத்திருக்கின்றனர் அரச எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அரச வாகனங்கள் மற்றும் முப்படையினருக்கு மாத்திரமே டீசல் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது
                 





மன்னாரில் எரிவாயு (கேஸ்) இன்மையால் மூடப்பட்ட உணவகங்கள் Reviewed by Author on March 09, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.