அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவு கள்ளப்பாட்டில் புதிய நீர் இணைப்புக்களை வழங்குவதற்கான நடமாடும் சேவை

முல்லைத்தீவு கள்ளப்பாடு தெற்கு
(Mul /90) கிராம அலுவலர் பிரிவில் வசிக்கும் மக்களுக்கு புதிய நீர் இணைப்புகளை வழங்கும் நடமாடும் சேவையானது எதிர்வரும் 8,9 -04-2022 சனி மற்றும் ஞாயிறு தினங்களில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினரால் மேற்கொள்ளப்படவுள்ளது. மேற்படி கிராம அலுவலர் பிரிவில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் உத்தியோகத்தர்கள் வீடு வீடாக வருகை தந்து புதிய நீர் இணைப்புக்கான விண்ணப்ப படிவங்களை பொது மக்களுக்கு வழங்கவுள்ளனர். 

விண்ணப்ப படிவத்தை பெற்றுக் கொண்ட பொது மக்கள் அதனை பூர்த்தி செய்து கோரப்பட்ட ஆவணங்களுடன் எதிர்வரும் 21.04.2022 அன்று கள்ளப்பாடு தெற்கு கிராம அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பில் பொது மக்கள் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகத்தின் 0212283981 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் மாவட்ட பொறியியலாளர் அலுவலகம் அறிவித்துள்ளது 

S.THAVASEELAN-



முல்லைத்தீவு கள்ளப்பாட்டில் புதிய நீர் இணைப்புக்களை வழங்குவதற்கான நடமாடும் சேவை Reviewed by Author on April 06, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.