அண்மைய செய்திகள்

recent
-

மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துக்காக மன்/புனித சவேரியார் ஆண்கள் பாடசாலையின் பழைய மாணவர்களால் நம்பிக்கை நிதியம் ஆரம்பித்து வைப்பு

மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் 150 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு பாடசாலை மாணவர்களின் கல்வி ஊக்குவிப்பு புலமை பரிசில் செயற்திட்டத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட நம்பிக்கை நிதியம் இன்று (06) வைபவரீதியாக அங்குரார்பணம் செய்யப்பட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது பாடசாலையின் தாய் சங்கத்துடன் இணைந்து அவுஸ்ரேலிய பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் புலமை பரிசீல் பரீட்சை மற்றும் உயர்தரத்தில் கல்வி கற்கும் திறமை வாய்ந்த மாணவர்களை கல்வியில் ஊக்குவிக்கும் முகமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கை நிதியம் இன்று(06) செவ்வாய்கிழமை மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் அதிபர் அருட்சகோதரர் ரெஜினோல்ட் தலைமையில் இன்று காலை 7.30 மணியளவில் வைபவ ரீதியாக ஆரம்பிக்கப்பட்டது

 அவுஸ்ரேலியாவில் நீண்டகாலமாக செயற்படும் மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் அவுஸ்ரேலிய கிளையின் ஏற்பாட்டில் அவர்களின் நிதி அனுசரணையில் வறுமையின் காரணமாக கல்வி நடவடிக்கைகளில் இடர்படும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு குறித்த நம்பிக்கை நிதியம் வைபவ ரீதியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது

 குறித்த நிகழ்வில் மன்னார் வலய கல்விப்பணிப்பாளர், அவுஸ்ரேலிய பழையமாணவர் சங்க கிளையில் நிர்வாக உறுப்பினர்கள்,பாடசாலை பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள்,பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர் குறித்த நம்பிக்கை நிதியத்தின் ஊடாக 6 மில்லியன் ரூபா நிதி உதவி பாடசாலை ஊடாக வறிய மாணவர்களுக்கு என முதல்கட்டமாக முதலிடப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது
       












மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துக்காக மன்/புனித சவேரியார் ஆண்கள் பாடசாலையின் பழைய மாணவர்களால் நம்பிக்கை நிதியம் ஆரம்பித்து வைப்பு Reviewed by Author on April 06, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.