வடமராட்சி விபத்தில் பாடசாலை மாணவன் பலி!
உடனடியாகவே காயமடைந்த மாணவர்களை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது மருத்துவமனையில் ஒரு மாணவன் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகலை நெல்லியடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
சடலம் தற்போது உரிய விசாரணைகளுக்காகவும், உடற்கூற்று பரிசோதனைக்காகவும் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த விபத்து சம்பவத்தில் மண்டான் கரணவாய் மேற்கு பகுதியைச் சேர்ந்த செல்வமோகன் வாணிஜன் (வயது 17) என்பவரே மரணமடைந்துள்ளார்.
குறித்த நபர் தற்போது நடைபெற்ற க.பொ.த.சாதாரண தர பரீட்சை எழுதியவர் எனவும் தெரியவந்துள்ளது.
வடமராட்சி விபத்தில் பாடசாலை மாணவன் பலி!
Reviewed by Author
on
June 03, 2022
Rating:
No comments:
Post a Comment