அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் இளைஞர் யுவதிகளுக்கான விசேட செயலமர்வு மற்றும் தலைமைத்துவ பயிற்சி

இளைஞர் யுவதிகளுக்கு இடையே சமூக ஒத்திசைவை பலப்படுத்தல் எனும் தொணிப்பொருளில் ரஹமா நிறுவனத்தின் அனுசரணையில் வாழ்வுக்கான தன்னார்வ தொண்டர் அமைப்பின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்டத்தில் உள்ள இளைஞர் யுவதிகளை ஒன்றினைத்து ஏற்பாடு செய்யப்பட்ட போதை பொருள் தடுப்பு தொடர்பான விசேட செயலமர்வு மற்றும் தலைமைத்துவ பயிற்சி ஓய்வு பெற்ற ஆசிரியர் ரெஜினா இராமலிங்கம் தலைமையில் மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம் பெற்றது 

 மாவட்ட ரீதியாக தெரிவு செய்யப்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு போதை பொருள் தொடர்பான தெளிவூட்டளை உருவாக்கும் முகமாகவும் சமூக ரீதியாக போதை பொருள் பயன்பாட்டை இல்லாதொழிக்க மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகளை உருவாக்கும் முகமாக குறித்த செயற்திட்டம் ஒழுங்கமைக்கப்பட்டு இடம் பெற்றது குறித்த நிகழ்வில் ரஹமா நிறுவன பணிப்பாளர் மரிக்கார் ரஹமா நிறுவன அதிகாரிகள் லியோ இளைஞர்கழக உறுப்பினர்கள் மற்றும் கிராம ரீதியிலான இளைஞர்கழக அங்கத்தவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர் இந்த நிகழ்வில் போதை பொருள் பாவனைக்கு எதிராகவும் போதை பொருள் பாவனையை குறைப்பதற்குமான சத்திய பிரமாணமும் இளையர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது குறிப்பிடதக்கது










மன்னாரில் இளைஞர் யுவதிகளுக்கான விசேட செயலமர்வு மற்றும் தலைமைத்துவ பயிற்சி Reviewed by Author on June 12, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.