அண்மைய செய்திகள்

recent
-

பாகிஸ்தானில் நடந்த குத்துச்சண்டை போட்டியில் வவுனியா மாணவிக்கு தங்கம்!

பாகிஸ்தானில் நடைபெற்ற 3ஆவது savate சர்வதேச குத்துசண்டை போட்டியில் வவுனியாவை சேர்ந்த டிலக்சினி கந்தசாமி தங்க பதக்கம் வென்றுள்ளார். குறித்த போட்டியில் இலங்கையிலிருந்து 13 (4 போட்டியாளர்கள் பங்கேற்றனர். போட்டியில் பங்கேற்றவர்களில் ஒன்பது பேர் தங்க பதக்கத்தினையும் நான்கு பேர் வெள்ளி பதக்கத்தினையும் பெற்றுள்ளனர். 

 குறித்த போட்டியில் பங்கேற்ற வடக்கு மாகாணத்தை சேர்ந்த வவுனியா வீராங்கனை டிலக்சினி கந்தசாமி சிறப்பாக போட்டியிட்டு தங்க பதக்கத்தை சுவீகரித்தார். இவர் பிரதேச, மாவட்ட, மாகாண, தேசிய ரீதியில் பல பதக்கங்களை வென்றுள்ளத்துடன் இன்று சர்வதேச ரீதியிலும் தங்க பதக்கத்தை வென்றுள்ளதோடு சப்ரகமுவ பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான மற்றும் முகாமைத்துவ கற்கை நெறி அலகு மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.


பாகிஸ்தானில் நடந்த குத்துச்சண்டை போட்டியில் வவுனியா மாணவிக்கு தங்கம்! Reviewed by Author on July 04, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.