மன்னாரில் வெளிநாடு செல்பவர்களுக்கு அதிசொகுசு பேருந்து சேவை
இது வரையில் வெளிநாடு செல்பவர்களுக்கு உதவிகள் செய்யப்பட்டிருந்தது ஆனால் இனிவரும் காலங்களில் இவ்வளவு தொகை ஒரு தனி நபருக்காக செலவிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டு இருப்பதனால் அரசாங்க அதிபர் திருமதி.ஸ்டான்லி டீமெல் அவர்கள் சொகுசு பேருந்து முகாமையாளர் இடம் தொடர்பு கொண்டு இவ்வாறு வெளிநாடு செல்பவர்களுக்கு அல்லது வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் கொழும்பிலிருந்து மன்னாருக்கு வருவதற்கு அதிசொகுசு பேருந்து சேவை ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார்.
அந்த வகையில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய தினங்களில் கொழும்பிலிருந்து மன்னார் மாவட்டத்திற்கும். ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய தினங்களில் மன்னாரிலிருந்து கொழும்பிற்கு செல்வதற்காக ஆயத்தம் செய்யப்பட்டுள்ளது.அவ்வாறு செல்பவர்கள் 0774902440 என்ற தொலைபேசியின் ஊடாக தொடர்பு கொண்டு ஆசனங்களை பதிவு செய்துகொள்ள முடியும்.
மன்னாரில் இருந்து கொழும்புக்கு 1 லட்சம் ரூபாவும் பேசாலையில் இருந்து கொழும்பிற்கு 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாவும் van கூலியாக அறவிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் வெளிநாடு செல்பவர்களுக்கு அதிசொகுசு பேருந்து சேவை
Reviewed by Author
on
July 18, 2022
Rating:
No comments:
Post a Comment