அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் எரிபொருள் அட்டை பெறாதவர்களுக்கு விசேட அறிவுறுத்தல்

மன்னார் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நாளை முதல் எரிபொருள் விநியோகத்திற்கு என விசேட நடைமுறை மேற்கோள்ளப்பட்டிருப்பதனால் எரிபொருள் அட்டைகளை பெறாதவர்கள் நாளை மறு தினம் புதன்கிழமை உரிய ஆவணங்களுடன் பிரதேச செயலகத்திற்கு வருகை தந்து எரிபொருள் அட்டையை பெற்று கொள்ளுமாறு மன்னார் பிரதேச செயளாலர் அறிவிறுத்தியுள்ளார் இவ்வாரம் மன்னார் பிரதேச செயலகப்பிரிவில் உள்ள கிராம சேவகர்கள் ஊடாக கிராம ரீதியாக பொது மக்களுக்கு எரிபொருள் அட்டை விநியோகிக்கும் நடைமுறை இடம்பெற்று வந்த நிலையில் இதுவரை எரிபொருள் அட்டையை பெறாதவர்கள் நாளை மறு தினம் 9 மணி முதல் எரிபொருள் அட்டைகளை பிரதேச செயலகத்தில் பெற முடியும் என பிரதேச செயலாளர் அறிவுறுத்தியுள்ளார் 

 அந்த வகையில் எரிபொருள் அட்டை பெறாதவர்கள் வாகன புத்தகம்,குடும்ப அட்டை,அடையாள அட்டை,வாகன வருமானவரி பத்திரம் ஆகியவற்றுடன் வருகை தந்து எரிபொருள் அட்டையை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது அதே நேரம் இனிவரும் நாட்களில் பிரதேச எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்கும் பட்சத்தில் கிராம சேவகர் பிரிவு ரீதியாக எரிபொருள் வழங்கப்படும் விபரம் அறிவிக்கப்படும் அதன் அடிப்படையில் மக்கள் எரிபொருளை பெற்று கொள்ளுமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார் இந்த கடினமான சூழலில் ஏரிபொருளின் தேவை அனைவருக்கும் உண்டு என்பத அறிந்து உரிய நடைமுறைகளை பின்பற்றி பொது மக்கள் ஏரிபொருளை பெற்றுக்கொள்ளுமாறு பிரதேச செயலாளர் வினயமாக கோரிக்கை விடுத்துள்ளார்




மன்னாரில் எரிபொருள் அட்டை பெறாதவர்களுக்கு விசேட அறிவுறுத்தல் Reviewed by Author on July 04, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.