கடும் அழுத்தங்களைக் கொடுத்து இலங்கையின் தீர்மானத்தை சீனா மாற்றியதாக இந்தியா தெரிவிப்பு
இந்திய கடற்படை தற்போது சீன கப்பலின் இருப்பிடம் மற்றும் கூடுதல் செயற்பாடுகளை மிக உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக கடற்படையின் பெயர் குறிப்பிடப்படாத அதிகாரி ஒருவர் கூறியதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பல நாடுகள் பிராந்தியத்தில் முக்கியத்துவம் பெறுவதற்காக, இந்து சமுத்திரத்தில் பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டு, தமது செல்வாக்கை விரிவுபடுத்த முயற்சிப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தாய்லாந்து விஜயத்தின் போது குறிப்பிட்டுள்ளார்.
இந்து சமுத்திரமானது இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே மற்றுமொரு சர்ச்சைக்குரிய இடமாக மாறாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா தமது தேசிய பாதுகாப்பு தொடர்பில் கவனத்திற்கொள்ள வேண்டும் என்ற போதிலும், வலயத்தில் விசேட சலுகைகளைக் கோர முடியாது எனவும் எஸ்.ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், அயல்நாடு என்ற வகையில் கலாசார, பொருளாதார ரீதியில் ஒருவருக்கொருவர் பிணைந்துள்ளதாக அவர் நினைவுபடுத்தியுள்ளார்.
பொருளாதார நெருக்கடியின் போது, சர்வதேச நாணய நிதியத்துடன் செயற்பட்டு முன்னோக்கிச் செல்ல இலங்கைக்கு உதவி புரிந்த முதலாவது நாடு இந்தியா என்பதனையும் இந்திய வௌிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நினைவுகூர்ந்துள்ளார்.
Yuan Wang 5 கப்பல் மேற்கொள்ளும் சமுத்திர ஆய்வு நடவடிக்கைகள் எந்தவொரு நாட்டினதும், மூன்றாம் தரப்பின் பாதுகாப்பு அல்லது பொருளாதாரத்திற்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என சீன வௌிவிவகார அமைச்சின் பேச்சாளர் வேன் வென்பிங் நேற்று தெரிவித்திருந்தார்.
கடும் அழுத்தங்களைக் கொடுத்து இலங்கையின் தீர்மானத்தை சீனா மாற்றியதாக இந்தியா தெரிவிப்பு
Reviewed by Author
on
August 17, 2022
Rating:
No comments:
Post a Comment