அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையில் கால்பதிக்கும் ஒமிக்ரோன் :எச்சரிக்கை விடுத்துள்ளார் பேராசிரியர் சந்திம ஜீவந்தர

உலகில் மிக வேகமாக பரவும் ஒமிக்ரோன் B.A 5 வகை கொழும்பில் பரவ ஆரம்பித்துள்ளது என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தொற்று நோயியல் பிரிவின் பேராசிரியர் சந்திம ஜீவந்தர இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். புதிய வகை மாறுபாடு முதன்முறையாக இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த பிரள்வு காரணமாக அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்படலாம். கடந்த சில காலமாக உலகம் முழுவதும் கொரோனா அலையை உருவாக்குவதில் இந்த திரிபு வெற்றியடைந்துள்ளதாகவும் பேராசிரியர் சந்திம ஜீவந்தர சுட்டிக்காட்டியுள்ளார். 

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட அண்மைய மரபணு பகுப்பாய்வின் படி, இந்த Omicron துணை வகை இலங்கையில் பரவி வருவதாக கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முந்தைய நோய் அல்லது தடுப்பூசிகள் மூலம் உடலில் கட்டமைக்கப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் இந்தப் புதிய துணை வகைக்கு உள்ளது என கண்டறியப்பட்டுள்ளதால், கூடிய விரைவில் பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளுமாறு பொதுமக்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன், இலங்கையில் பரவி வரும் B.A 5 உப வகை எதிர்காலத்தில் மிகவும் ஆபத்தானதாக அமையலாம் எனவும் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.


இலங்கையில் கால்பதிக்கும் ஒமிக்ரோன் :எச்சரிக்கை விடுத்துள்ளார் பேராசிரியர் சந்திம ஜீவந்தர Reviewed by Author on August 02, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.