சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கு மத்தியில் உருவாக்கப்பட்ட காணாமல் போனோருக்கான அலுவலகத்தால் எந்தவிதமான நன்மைத்தனங்களும் எட்டப்படவில்லை-சகாயம் திலீபன்
குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,,,,
இறுதி யுத்தத்திற்கு முற்பட்ட காலங்களிலும் பின்னரான காலங்களிலும் வெள்ளை வேன் கடத்தல்,இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் ,அரச படைகளால் கடத்தப்பட்டவர்கள் ,வயது வித்தியாசம் இன்றி இலங்கை அரச தரப்பு படைகளால் கைது செய்யப்பட்டவர்கள் என இப் பட்டியல் நீண்டு போவதை பார்க்கின்றோம்.
இலங்கையின் போர்ச்சூழல் ஆரம்ப கால பகுதியில் இருந்து மனித கடத்தல் அல்லது வலிந்து காணாமல் போகச் செய்தல் எனும் மனித உரிமை மீறல் நடைபெற்றுள்ளது என்பதற்கு சான்றாக இன்றும் உறவுகளை தொலைத்துவிட்டு வீதிகளிலும் வீதியோர கொட்டகைகள் அமைத்து வயோதிப தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளுக்காகவும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காகவும் கண்ணீரோடு தெருத்தெருவாக தங்களின் உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை கண்டறிவதற்காக மழையிலும் வெயிலும் சமூகத்தின் ஏளனப் பார்வை க்கு மத்தியிலும் உன்னதமான உயிரோட்டமான தொரு போராட்டம் வடக்கு கிழக்கு தமிழர் வாழ்கின்ற பகுதிகளில் மக்கள் மயப்படுத்தப்பட்டு நடைபெற்று வருகின்றது.
அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கும் எதிர் பார்ப்புக்களுக்கும் இலங்கை அரசாங்கம் இதுவரை நியாயமான ஒரு பொறிமுறையை முன்வைக்கவில்லை.
இங்கே பாதிக்கப்பட்ட மக்களின் ஒட்டுமொத்த கோசமும் நியாயமான சர்வதேச விசாரணையை நோக்கியதாகவே அமைந்திருக்கின்றது.
இலங்கையில் நடைபெற்ற மனித குலத்திற்கு எதிரான போர் குற்றங்கள் சர்வதேச ரீதியில் விசாரிக்கப்பட வேண்டும் என்ற மக்களின் அங்கலாய்ப்புக்கு பூகோள அரசியல் இடம் தரவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை .
நல்லாட்சி அரசாங்கம் என்று சொல்லப்படுகின்ற கடந்த அரசாங்கத்தில் கூட சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கு மத்தியில் உருவாக்கப்பட்ட காணாமல் போனோருக்கான அலுவலகத்தால் எந்தவிதமான நன்மைத்தனங்களும் அல்லது நீதியான விசாரணைகளுக்கான எந்த முன்னெடுப்புகளும் இதுவரை எட்டப்படவில்லை என்பது நிதர்சனமான உண்மை.
2009 ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் பின் நாட்களில் இருந்து இற்றைவரை 115 க்கும் மேற்பட்ட தாய்மார் தங்களுடைய பிள்ளைகளை தேடிய நியாயமான தேடலில் மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்பட்டு மரணத்துள்ளனர்.
இவர்களது மரணம் சாதாரணமல்ல.
வலிகளை சுமந்த சாட்சியங்கள் இந்த இறப்புக்களின் மூலம் அழிக்கப்பட்டுக் கொண்டு வருகிறது.
தாமதிக்கும் நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமமானது என்ற நிலைக்கு வர வேண்டியுள்ளது. இன்று சமூகத்தில் உள்ள பொருளாதார நெருக்கடிக்குள் மிகவும் பாதிக்கப்படும் ஒரு தரப்பாகவும் இந்த குறிப்பாக கணவர் காணாமலாக்கப்பட்டடு பிள்ளைகளுடன் வாழும் இளம் தாய்மார்களின் இன்றை நிலை பெண்தலைமைக் குடும்பங்களாக சொல்ல முடியாத துயரங்களை சுமந்து வாழ்ந்து தங்களின் உறவுகளுக்காக தொடர்ந்து வீதிகளில் இறங்கி போராடி வருகின்ற அம்மாக்களை நிலையை கண்கூடாக பார்க்க முடிகிறது.
அவர்களுடைய உறவுகளை தேடிய போராட்டத்தில் பொது மக்களும் பங்குதாரராக மாற வேண்டும்.
இந்த காணாமல் ஆக்கப்படும் சந்தர்ப்பங்கள் தனி குடும்பங்களுக்கு நேர்ந்த மனித உரிமை மீறல்கள் அல்ல மாறாக இது யுத்தத்தின் ஒரு வகை தந்திரோபாய செயற்பாடாகவே கருதுகின்றோம்.
இறந்துபோணவர்களுக்கு ஒரு நினைவேந்தல் செய்வதன் மூலம் உளவியல் ரீதியாக ஆறுதல் கிடைக்கும் ஆனால் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என தெரியாது உண்மை நிலையை கண்டறிவதற்கான அம்மாக்களின் போராட்டத்தில் இன்று அப்பாவின் முகங்களை மறந்த சின்னஞ் சிறார்களும் கடைசி காலத்தில் செய்ய வேண்டிய கடமைகளை கூட செய்வதற்கு பிள்ளைகளின்றி வாழும் பெற்றோர்கள் என நீண்டுகொண்டே போகும் வலிகளின் கதைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.
நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து இந்த தாய்மார்கள் செய்யும் அறவழி போராட்டத்தின் மூலம் சர்வதேசத்தின் உதவியுடன் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உண்மை நிலையை இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.
இவர்களுக்கான நீதி பொறிமுறை மற்றும் பொறுப்புக்கூறல் என்பதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.
அதுவரை எமது அம்மாக்களுடைய போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் எமது முழுமையான ஒத்துழைப்பு கள் இருக்கும் என்பதை கூறி நிற்கின்றோம். என அவர் மேலும் தெரிவித்தார்.
சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கு மத்தியில் உருவாக்கப்பட்ட காணாமல் போனோருக்கான அலுவலகத்தால் எந்தவிதமான நன்மைத்தனங்களும் எட்டப்படவில்லை-சகாயம் திலீபன்
Reviewed by Author
on
August 30, 2022
Rating:
No comments:
Post a Comment