அண்மைய செய்திகள்

recent
-

மாணிக்ககல் அகழ்வு – 5 பேர் கைது

பொகவந்தலாவ, மாவெலி வனப்பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டு வந்த 5 சந்தேக நபர்களை பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த கைது சம்பவம் ​நேற்று (15) இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

 மாவெலி வனப்பகுதியில் இடம்பெற்று வந்த சட்டவிரோத மானிக்ககல் அகழ்வு தொடர்பில் பொகவந்தலாவ பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இந்த 5 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதோடு, மாணிக்ககல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் பொலிஸார் கைபற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் பொகவந்தலாவ இராணிகாடு மற்றும் ஆல்டி தோட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




மாணிக்ககல் அகழ்வு – 5 பேர் கைது Reviewed by Author on September 16, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.