அண்மைய செய்திகள்

recent
-

பிரபல பாடகர் பம்பா பாக்யா மரணம் : திரையுலகினர் சோகம்

பிரபல பின்னணி பாடகர் பம்பா பாக்கியா (49) நேற்றிரவு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் காலமானார். அவரது திடீர் மறைவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், திரையுலகினர், ரசிகர்கள் பாடகர் பம்பா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். குறுகிய காலத்தில் உலகம் முழுவதுமே ரசிகர்களைக் கொண்டிருந்தவர் பம்பா பாக்யா. பழகுவதற்கு எளிமையானவர்.

 அவரது வசீகரிக்கும் குரலில், பாடிய அனைத்துப் பாடல்களுமே தெறி ஹிட் ரகம் தான். பம்பா பாக்யா ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ‘ராவணன்’ படத்தில் இருந்தே பாடகராக அறிமுகமானார் பம்பா. 2.0 படத்தின் 'புள்ளினங்காள்', சர்கார் படத்தின் 'சிம்ட்டாங்காரன்', பிகில் படத்தின் 'காலமே', என பல ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார். மணிரத்னம் இயக்கத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்திலும் 'பொன்னி நதி' பாடல் பம்பா பாக்யா பாடியது தான். இவரது மரணத்துக்கான காரணம் வெளியாகவில்லை. திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவால், நேற்றிரவு 12.30 மணியளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாடகர் பம்பா பாக்யா, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். அவருடைய திடீர் மரணம் ரசிகர்களையும், திரையுலகினரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. பாடகர் பம்பா பாக்யா காலமான தகவலை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மான் பதிவிட்டுள்ளார்.

பிரபல பாடகர் பம்பா பாக்யா மரணம் : திரையுலகினர் சோகம் Reviewed by Author on September 02, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.