அண்மைய செய்திகள்

recent
-

கிரீஸ் நாட்டில் 2 படகுகள் கவிழ்ந்து விபத்து- 15 அகதிகள் பலி

துருக்கியிலிருந்து கிரிஸுக்கு 100க்கும் மேற்பட்டவர்கள் 2 படகுகளில் அகதிகளாக தப்பிச் சென்றபோது கடுமையான சூறாவளிக் காற்றில் சிக்கி படகுகள் விபத்துக்குள்ளானதில் இதுவரை 15 அகதிகள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அகதிகளை ஏற்றிய இரு படகுகளும் கடுமையான சூறாவளிக் காற்றில் சிக்கி நிலை தடுமாறி பாறைகள் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகின. 

இதையடுத்து, படகில் பயணம் செய்த அகதிகள் கடலில் மூழ்கினர். சிலர் கடலில் தத்தளித்தபடி இருந்தனர். இது பற்றி அறிந்ததும் கடலோர காவல்படையினர் விரைந்து சென்று 30 பேரை பத்திரமாக மீட்டனர். 15 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். மேலும், காணாமல் போன பலரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

கிரீஸ் நாட்டில் 2 படகுகள் கவிழ்ந்து விபத்து- 15 அகதிகள் பலி Reviewed by Author on October 06, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.