அண்மைய செய்திகள்

recent
-

காலிமுகத்திடல் கடற்கரைக்கு குளிக்கச்சென்ற சிறுவர்களில் ஒருவர் சடலமாக மீட்பு

கொழும்பு காலிமுகத்திடல் கடற்கரைக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் 7 பேரில் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கொழும்பு – வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த சிறுவர்களே இன்று குளிக்கச் சென்றுள்ளனர். இதன்போதே 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளான்.

 இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போன சிறுவன் தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கொழும்பு – வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் பாதுகாப்பு எச்சரிக்கை பதாகை அகற்றப்பட்ட நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.





காலிமுகத்திடல் கடற்கரைக்கு குளிக்கச்சென்ற சிறுவர்களில் ஒருவர் சடலமாக மீட்பு Reviewed by Author on October 07, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.