நடிகர் ஜெயம் ரவி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நடிகர் ஜெயம் ரவி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.லேசான அறிகுறிகள் இருந்ததால் இன்று மாலை கொரோனா பரிசோதனை செய்த போது கொரோனா பாசிட்டிவ் என வந்ததாகவும்,
எனவே தற்போது மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி, தன்னை தனிமை படுத்திகொண்டு, உரிய சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும், தன்னுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்
இந்த தகவலால் அவரின் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். ஜெயம் ரவி தற்போது கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் அகிலன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
மேலும், ராஜேஷ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார்.
No comments:
Post a Comment