அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தில் 2022 - 2023 ஆம் ஆண்டிற்கான பெரும்போக பயிர்ச் செய்கை தொடர்பான விசேட கலந்துரையாடல்.

மன்னார் மாவட்டத்தில் 2022 - 2023 ஆம் ஆண்டிற்கான பெரும்போக பயிர்ச் செய்கை தொடர்பான விசேட கூட்டம் இன்று (12) புதன்கிழமை காலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மெல் தலைமையில் உயிலங்குளத்தில் அமைந்துள்ள கட்டுக்கரை குளத்திட்ட விவசாயக் கூட்ட மண்டபத்தில் இடம் பெற்றது. குறித்த நிகழ்வில் முதலாவது நீர் விநியோகம் இம்மாதம் 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் எனவும் இறுதி திகதியாக எதிர் வரும் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்போது கால்நடை பராமரிப்பு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. அதன் அடிப்படையில் கால் நடைகளை இம்முறை தேத்தாவடி மற்றும் கட்டுக்கரையின் மேல்பகுதி புல்லறுத்தான் கண்டல்-மேய்ச்சல் தரை போன்ற இடங்களில் பட்டி அடைத்து பராமரிக்கும் படி கால்நடை பண்ணையாளர்களுக்கு அறியுறுத்தப்பட்டுள்ளது. 

 மேலும் விதை நெல், உரமானியம், விவசாயிகளுக்கான காப்புறுதிகள், விவிசாயிகள் எதிர் கொள்ளும் கால்நடைகளின் தாக்கம் போன்ற பல விடையங்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டன. அரச அதிபர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் பெரும்போக பயிர்ச் செய்கை தொடர்பாக பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டதுடன், மறு உணவுப்பயிர்கள் தொடர்பாகவும் முக்கிய கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், கமநல சேவைகள் திணைக்கள உதவி ஆணையாளர், விவசாய திணைக்கள பணிப்பாளர், மாவட்ட விவசாய பிரதி பணிப்பாளர், நீர்ப்பாசன திணைக்கள் அதிகாரிகள், கமநல சேவைகள் திணைக்களத்தின் அதிகாரிகள், வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், வங்கி முகாமையாளர்கள், ஏனைய அரச உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்






.
மன்னார் மாவட்டத்தில் 2022 - 2023 ஆம் ஆண்டிற்கான பெரும்போக பயிர்ச் செய்கை தொடர்பான விசேட கலந்துரையாடல். Reviewed by Author on October 12, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.