அண்மைய செய்திகள்

recent
-

பலாலி விமான நிலையத்திலிருந்து தமிழகத்திற்கான விமான சேவை இம்மாத இறுதியில் ஆரம்பம்

யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்திலிருந்து தமிழகத்திற்கான விமான போக்குவரத்தை இந்த மாத இறுதியில் ஆரம்பிக்கவுள்ளதாக பலாலி சர்வதேச விமான நிலையம் அறிவித்துள்ளது. அதன்படி, பலாலி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கான விமான போக்குவரத்தினை எதிர்வரும் 28ஆம் திகதி ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக அந்த விமான நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார். குறித்த விமான சேவை தொடர்பில் இந்திய விமான நிறுவனத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

 இந்த நிலையில், விமான போக்குவரத்தை முன்னெடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நாட்டின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக பலாலி சர்வதேச விமான நிலையம் 2019 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பலாலி விமான நிலையத்திலிருந்து தமிழகத்திற்கான விமான சேவை இம்மாத இறுதியில் ஆரம்பம் Reviewed by Author on October 12, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.