அண்மைய செய்திகள்

recent
-

சுற்றிவளைப்புக்குச் சென்ற பொலிஸ் அதிகாரி பலி!

சுற்றிவளைப்புக்கு சென்று மீண்டும் பொலிஸ் நிலையத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்த குழு ஒன்றின் பொலிஸ் அதிகாரி ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். கடந்த 21ஆம் திகதி இரவு பனாமுர - எம்பிலிபிட்டிய வீதியில் பனாமுர பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பனாமுர பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று சுற்றிவளைப்பிற்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த போது வீதியில் சென்ற நாய் ஒன்று மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த இரு அதிகாரிகளின் மோட்டார் சைக்கிளுக்கு குறுக்காக பாய்ந்துள்ளது.

 அங்கு மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்து எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் அதிகாரி ஒருவர் நேற்று (22) உயிரிழந்துள்ளார். பனாமுர பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவில் கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிளான இவர் பன்கன்விலயாய கட்டுவன பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடையவராவார். சம்பவத்தில் காயமடைந்த மற்றைய அதிகாரி எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.


சுற்றிவளைப்புக்குச் சென்ற பொலிஸ் அதிகாரி பலி! Reviewed by Author on November 23, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.