A/L பரீட்சார்த்திகளுக்கான முக்கிய அறிவிப்பு
இதன்படி, 17ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி முதல் பரீட்சை முழுமையாக முடியும் வரை பரீட்சார்த்திகளுக்கான மேலதிக வகுப்புகளை ஏற்பாடு செய்தல் மற்றும் அந்த வகுப்புகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாடத்தின் விரிவுரைகள், கருத்தரங்குகள், பயிலரங்குகள் நடத்துதல், மேற்படி தேர்வுகளுக்கான மாதிரி வினாக்கள் அடங்கிய வினாத்தாள்களை அச்சடித்து விநியோகித்தல், தேர்வுத் தாள்களில் உள்ள வினாக்களை விளம்பரப்படுத்துதல் அல்லது சுவரொட்டிகள், பதாகைகள், கையேடுகள், மின்னணு, அச்சு ஊடகங்கள் அல்லது சமூக ஊடகங்கள் மூலம் விளம்பரம் செய்தல் இதுபோன்ற விடயங்களைச் செய்வது அல்லது வைத்திருப்பது தடைசெய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு நபரோ அல்லது நிறுவனமோ அல்லது வேறு தரப்பினரோ இந்த உத்தரவுகளை மதிக்காமல் செயற்பட்டால், அந்த நபரோ அல்லது நிறுவனமோ அல்லது அந்த தரப்பினரோ குற்றவாளிகள் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
எந்தவொரு நபரோ அல்லது அமைப்போ அல்லது தரப்பினரோ இந்த உத்தரவுகளை மீறினால் அருகிலுள்ள பொலிஸ் நிலையம் அல்லது பொலிஸ் தலைமையகம் அல்லது இலங்கைப் பரீட்சை திணைக்களத்திற்கு பின்வரும் இலக்கங்களில் முறைப்பாடு செய்யுமாறும் அமித் ஜயசுந்தர பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
A/L பரீட்சார்த்திகளுக்கான முக்கிய அறிவிப்பு
Reviewed by Author
on
January 13, 2023
Rating:
No comments:
Post a Comment