அண்மைய செய்திகள்

recent
-

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி கைது

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் வவுனியா மாவட்ட தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி வவுனியாவில் 2 ஆயிரத்து 200 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தப்படுகின்றது. 

 இந்தப் போராட்டம் நடைபெறும் கொட்டகைக்கு சட்டவிரோதமாக மின்சாரத்தைப் பெற்றார் என்ற குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர். ஆனால் போராட்டக் கொட்டகைக்கு இலங்கை மின்சார சபையே மின் இணைப்பு தந்தது. ஏற்படும் பழுதுகளையும் மின்சார சபை ஊழியர்களே திருத்துவது வழமை. மின்சாரத்தை நாம் சட்ட விரோதமாக பெறவில்லை என்று காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி கைது Reviewed by Author on March 10, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.