அண்மைய செய்திகள்

recent
-

மன்னார், நறுவிலிக் குளம் மாவட்ட பொது விளையாட்டு மைதானத்தின் நிர்மாணப்பணிகள்எதிர்வரும் ஜூலை மாதம் பூர்த்தி செய்யப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படும்- இராஜாங்க அமைச்சர் றோகண திசாநாயக்க

 மன்னார் மாவட்ட பொது விளையாட்டு மைதானத்தின் வேலைகள் அனைத்தும் எதிர்வரும் ஜூலை மாதம் பூர்த்தி செய்யப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படும் என விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சர் றோகண திசாநாயக்க இன்று (4) பாராளுமன்றத்தில் உறுதியளித்தார்.


அத்துடன் அடுத்த ஆண்டு மைதானத்தின் வேலைகள் பூர்த்தி செய்ய 50 மில்லியன் ரூபா ஒதுக்கப் பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறியிருந்தார்.
 
மன்னார், நறுவிலிக் குளத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மாவட்ட பொது விளையாட்டு மைதானத்தின் நிர்மாணப்பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த வருடம் மக்கள் பாவனைக்கு விடப்படும் என உறுதி அளித்த போதும் இன்னமும் வேலைத்திட்டம் பூர்த்தி செய்யப்படவில்லை எனவும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் இன்றைய தினம் (4) பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.

விளையாட்டுத்துறை அமைச்சு மீதான வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதம் இன்றைய தினம்(4) இடம்பெற்றது.

இதன்போது மன்னார் பொது விளையாட்டு மைதான வேலைத்திட்டங்கள் எப்போது நிறைவு பெறும் என பாராளுமன்ற உறுப்பினர் வினவிய போதே இராஜாங்க அமைச்சர் றோகண திசாநாயக்க இவ்வாறு பதிலளித்தார்.

நீச்சல் தடாகம், மெய்வல்லுநர் தடகளம் மற்றும் பாதுகாப்பு அறை என்பனவே முடிவுறுத்தப்பட வேண்டியுள்ளது என்பதுடன் இவ்வேலைகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக வும் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் அனைத்து நிர்மாணப்பணிகளும் முடிவுறுத்தப்படும் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்திருந்தார்


மன்னார், நறுவிலிக் குளம் மாவட்ட பொது விளையாட்டு மைதானத்தின் நிர்மாணப்பணிகள்எதிர்வரும் ஜூலை மாதம் பூர்த்தி செய்யப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படும்- இராஜாங்க அமைச்சர் றோகண திசாநாயக்க Reviewed by Author on December 04, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.