அண்மைய செய்திகள்

recent
-

யாழில் இரண்டாவது நாளாகவும் முற்றாக நிறுத்தப்பட்டுள்ள தனியார் பேருந்து சேவைகள்

 யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் உள்ளூர் மற்றும் நெடுந்தூர தனியார் பேரூந்து சேவைகள் அனைத்தும் முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளது


அத்தோடு யாழ்ப்பாணத்தில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு சேவையில் ஈடுபடும்  பேரூந்துகள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சேவையில் ஈடுபடும் தனியார் பேரூந்து சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.


நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் உள்ளூர் தனியார் பேரூந்து சேவைகள் சேவையை முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் நொடுந்தூர பேரூந்து சேவைகள் முற்றாக நிறுத்தப்பட்டிருந்தன.


ஆனால் இன்றைய தினம் உள்ளூர் மற்றும் நெடுந்தூர பேரூந்து சேவைகள் அனைத்தும் முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிவதாக எமது செய்தியாளர் மேலும் குறிப்பிட்டார்.


முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாததால் நேற்று (28) முதல் தனியார் போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது என வட இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் தலைவர் சி.சிவபரன் நேற்று முன்தினம்(27) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து தெரிவித்திருந்தார்.


இதன் அடிப்படையில் இரண்டாவது நாளாகவும் தனியார் போக்குவரத்து சேவைகள் முற்றாக இடைநிறுத்தப்படுள்ளமை குறிப்பிடத்தக்கது



யாழில் இரண்டாவது நாளாகவும் முற்றாக நிறுத்தப்பட்டுள்ள தனியார் பேருந்து சேவைகள் Reviewed by Author on February 29, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.