அண்மைய செய்திகள்

recent
-

வவுனியாவில் 70 போதை மாத்திரைகள் மற்றும் மாவாவுடன் இளைஞர் கைது!!

 வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் 70 போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா கலந்த மாவாவுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று (28.04) தெரிவித்தனர்.

வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் திடீர் சோதனை முன்னெடுக்கப்பட்ட போது அப் பகுதியில் உள்ள சிறிய கடை ஒன்றில் வைத்து போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா கலந்த மாவா விற்பனை செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதன்போது, குறித்த கடையில் இருந்து 70 போதை மாத்திரைகள் பொலிசாரால் கைப்பற்றப்பட்டதுடன் கஞ்சா கலந்த மாவாவும் மீட்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த வியாபார நிலைய உரிமையாளரான மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்



.

வவுனியாவில் 70 போதை மாத்திரைகள் மற்றும் மாவாவுடன் இளைஞர் கைது!! Reviewed by NEWMANNAR on April 28, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.