அண்மைய செய்திகள்

recent
-

அத்துமீறுவோரின் படகுகளை பறிமுதல் செய்ய ஆலோசனை

இலங்கை கடல்பரப்பினுள் அத்துமீறி மீன் பிடிப்பவர்களை கைது செய்வத்றகு பதிலாக அவர்களது படகுகளை ஒரு சட்ட செயன்முறை மூலம் பறிமுதல் செய்யும் வழிகளை வகுப்பதற்கு மீன்பிடி அமைச்சு சட்டமா அதிபருடன் ஆலோசித்து வருகின்றது.

 பெருந்தொகையாக மீன்பிடிக்க வருவோரை கைது செய்வதில் பல நடைமுறை பிரச்சினைகள் உள்ளன. எனவே, இந்த பிரச்சினையை கையாள புதிய அணுகுமுறை தேவையாக உள்ளதென மீன்பிடி அமைச்சர் டாக்டர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

 அத்துமீறிவரும் கடற்றொழிலாளர்களை கைது செய்யாமல் அவர்களின் படகுகளை பறிமுதல் செய்ய நாம் எண்ணுகின்றோம். அவர்களை கைது செய்வது அரசாங்கத்திற்கு பெரும் செலவை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

அத்துமீறுவோரின் படகுகளை பறிமுதல் செய்ய ஆலோசனை Reviewed by Admin on August 24, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.