கார் விபத்தில் இருவர் தெய்வாதீனமாக உயிர் பிழைப்பு-Photo
மட்டக்களப்பு அரசடிப் பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற கார் விபத்தில் அதில் பயணம் செய்த இருவரும் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர்.
வேகமாக வந்த கார் வேகத்தினை கட்டுப்படுத்த முடியாமல் பிரதான வீதியில் நடுவில் கட்டப்பட்டிருந்த கட்டில் மோதுண்டு தடம்புரண்டுள்ளது.
எனினும் இதில் பயணித்த கார் சாரதியும் அதன் உரிமையாளரும் சிறு காயங்களுடன் தப்பியுள்ளனர்.
களுவாஞ்சிக்குடியில் இயங்கும் தனியார் வங்கியின் முகாமையாளர் தயாபாரன் மற்றும் அவரது காரின் சாரதி சாந்தகுமார் ஆகியோரே சிறு காயங்களுடன் தப்பியுள்ளனர்.
சம்பவ இடத்துக்கு சென்ற மட்டக்களப்பு போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கார் விபத்தில் இருவர் தெய்வாதீனமாக உயிர் பிழைப்பு-Photo
Reviewed by NEWMANNAR
on
August 19, 2014
Rating:
No comments:
Post a Comment