அண்மைய செய்திகள்

recent
-

அமெரிக்க ஜனாதிபதியின் இலங்கை விஜயம் விரைவில் இடம்பெறலாம் : அஜித் பி பெரேரா


வெளிநா­டு­க­ளு­ட­னான உறவு வலு­வ­டைந்து வரும் நிலையில் அமெ­ரிக்க ஜனா­தி­ப­தியின் இலங்கை விஜ­யமும் விரைவில் இடம் பெறலாம் என எதிர்­பார்த்­துள்­ள­தாக வெளிவி­வ­கார பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா தெரி­வித்தார். வெளிவி­வ­கார அமைச்சில் நேற்று இடம் பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில், கடந்த ஜன­வரி 9 ஆம் திகதி கடந்த அர­சாங்­கத்­திற்கு முற்­றுப்­புள்ளி வைத்­ததன் பின்னர் புதிய அரசின் கீழ் வெளிநா­டு­க­ளு­ட­னான உறவு வலு­வ­டைந்­துள்­ளது. குறிப்­பாக ஐரோப்­பிய நாடு­க­ளு­டனான உறவு மீண்டும் வலு­வ­டைந்­துள்­ளது. ரஷ்யாவும், அமெ­ரிக்­காவும் எமது நாட்­டுடன் நல்­லு­றவை பேண முன்­வந்­துள்­ளன.இதனை சாத­க­மாகப் பயன்­ப­டுத்திக் கொண்டு நாட­்டிற்­கு இல்­லாது போயுள்ள ஜீ.எஸ்.பி.பிளஸ். போன்ற வரிச் சலு­கை­களை மீண்டும் பெற்றுக் கொள்ள எதிர்­பார்­த்துள்ளோம். எமது நாட்டில் இடம் பெற்­றுள்ள மனித உரிமை மீறல்கள் கார­ண­மாக பல வகை­யிலும் வெளிநா­டு­க­ளு­ட­னான உறவை நாம் இழந்­துள்ளோம் அதனால் அதனை புது­ப் பிக்கும் வகையில் இடம் பெற்று வரும் பேச்சுவார்த்­தை­க­ளி­லேயே அமெ­ரிக்க ஜனா­தி­ப­தியின் இலங்கை வருகை குறித்தும் ஆரா­யப்­பட்­டி­ருந்­தது. இதன் மூலம் மீனவர் பிரச்­சி­னை­க­ளுக்கும் உட­னடி தீர்வை எட்­டக்­கூ­டிய வாய்ப்பு கிடைக்கும் சாத்­தியம் உள்­ளது. எவ்­வா­றா­யினும் இவ்­வ­ருட இறு­தியில் நல்­லாட்சி அர­சாங்கம் அமெ­ரிக்க ஜனா­தி­ப­தியின் விஜத்­தினை உறு­திப்­ப­டுத்திக் கொள்ளும். அதே­வேளை நாளை 3 ஆம் திகதி தொடக்கம் 5 ஆம் திகதி வரையில் சென்ஹய் மாநாடு ரஷ்ய தலை­நகர் மொஸ்­கோவில் இடம் பெற­வுள்­ளது. இதில் பங்­கேற்­பதன் மூலம் ஆப்­கா­னிஸ்தான், ஈரான், மொங்கோலியா, பாகிஸ்தான், துருக்கி, பௌ ருஸ் போன்ற நாடுகளுடனான உறவினை வலுப்படுத்திக் கொள்ள முடியும் என எதிர் பார்த்துள்ளோம் என்றார்.
அமெரிக்க ஜனாதிபதியின் இலங்கை விஜயம் விரைவில் இடம்பெறலாம் : அஜித் பி பெரேரா Reviewed by Author on June 02, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.