அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் ஆயரின் உடல் நிலை தொடர்பாக மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை விக்டர் சோசை அடிகளார் விசேட அறிக்கை


மன்னார் ஆயர் மேதகு இரா. யோசேப்பு ஆண்டகை அவர்களின் உடல் நிலை தொடர்பாக பல தரப்புக்கள் மத்தியில் இருந்து அக்கறையும் கரிசனையும் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நரம்பியல் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி எச். கே. டீ. எஸ். குலரெட்ன அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டு ஆயர் அவர்களின் தற்போதைய உடல் நிலை தொடர்பான தகவல்களை வழங்குவதாக மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஏ.விக்டர் சோசை அடிகளார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,

மே மாதம் 2ஆம் திகதி மூளையில் ஏற்பட்ட இரத்தக் கசிவு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நரம்பியல் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஆயர் அவர்கள், துரதிஸ்ரவசமாக மே மாதம் 17ஆம் திகதி பக்கவாதத்தினாலும் பாதிக்கப்பட்டார்.

இதனிமித்தம் அவருடைய வலது கை மற்றும் வலது கால் பாதிப்படைந்துள்ளன.

தற்போது அளிக்கப்பட்டு வருகின்ற இயன் மருத்துவம் மூலமாக அவருடைய உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இவற்றுடன் இரத்த அழுத்தம், நீரழிவு, ஆஸ்மா போன்றவைகளும் கண்காணிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகின்றது.

இந்நிலையில் ஆயர் அவர்கள் தொடர்ந்தும் மருத்துவமனையில் இருந்து மருத்துவ சிகிச்சை பெற வேண்டிய நிலையில் உள்ளார்.
ஆயரின் உடல்நிலையில் அக்கறையுள்ள அனைவருடைய பிரார்த்தனைக்காகவும் நன்றி தெரிவிக்கின்ற அதே வேளையில், அவருடைய உடல்நலம் தேற தொடர்ந்தும் பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை (05.06.2015) அன்று ஆயருக்கான விசேட பிரார்த்தனை தினமாக அனுஷ்டிக்குமாறு மன்னார் மறைமாவட்ட இறைமக்களைக் கேட்டுள்ளோம். என மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை விக்டர் சோசை அடிகளார் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மன்னார் ஆயரின் உடல் நிலை தொடர்பாக மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை விக்டர் சோசை அடிகளார் விசேட அறிக்கை Reviewed by NEWMANNAR on June 03, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.