அண்மைய செய்திகள்

recent
-

20 ஆவது சட்டமூலம் தொடர்பில் சிறுபான்மை இன சிறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆராய்வு


20ஆவது திருத்தச் சட்­ட­மூலம் தொடர்­பாக சிறு­பான்மை இன, சிறு அர­சியல் கட்­சி­களின் நேற்­றைய சந்­திப்­பிலும் இறு­தி­மு­டிவு எட்­டப்­ப­ட­வில்லை. இவ்­வா­றி­ருக்­கையில் பல்­வேறு சர்ச்­சை­க­ளுடன் இழு­ப­றியில் இருக்கும் இத்­தி­ருத்­தச்­சட்டம் தொடர்­பாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன விரைவில் இறுதி முடிவை வெளியி­டுவார் என உள்­ளக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. தேர்தல் முறையில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக அர­சியல் அமைப்பில் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்ள உத்­தேச 20 ஆவது திருத்­தச்­சட்ட மூலம் தொடர்­பாக ஆராய்­வ­தற்­கான நேற்­றைய தினம் சிறு­பான்மை, சிறு அர­சியல் கட்­சி­களின் பிர­தி­நி­திகள் கூட்டம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­மை­ய­க­மான தாரு­ச­லாமில் நடை­பெற்­றது. முஸ்லிம் காங்­கிரஸ் தலைவரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தலை­மையில் இடம் பெற்ற இச்­சந்­திப்பில் அமைச்சர் பழனி திகாம்­பரம், கல்­முனை மாந­கர மேயரும் மு.கா.வின் பிரதி தவி­சா­ள­ரு­மான நிஸாம் காரி­யப்பர், அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் செய­லாளர் வை.எல்.எஸ்.ஹமிட், ஜன­நா­யக மக்கள் காங்­கி­ரஸின் தலைவர் கும­ர­கு­ரு­பரன் மற்றும் முர­ளி­ர­கு­நாதன் ஆகியோர் பங்­கேற்­றி­ருந்­தனர். 20ஆவது திருத்­தச்­சட்ட மூலம் தொடர்­பாக அமைச்சர் ஹக்கீம் மற்றும் ஹெல உறு­ம­யவின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான பாட்­டலி சம்­பிக்க ரண­வக்­க­விற்கும் இடையில் ஏற்­பட்­டுள்ள கருத்து முரண்­பாடு, அதன் பின்னர் ஹெல உறு­ம­யவின் பிர­தி­நி­திகள் வெளியிடும் கருத்­துக்கள், 20ஆவது திருத்­தச்­சட்­ட­மூலம் தொடர்­பாக இறு­தி­யான முடிவு ஆகி­யவை தொடர்­பாக கலந்­து­ரை­யா­டு­வ­தற்கே இச்­சந்­திப்பு ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது. எவ்­வா­றா­யினும் குறித்த கூட்­ட­த்தில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு, மக்கள் விடு­தலை முன்­னணி, ஜாதிக ஹெல உறு­மய, ஜன­நா­யக மக்கள் காங்­கிரஸ், ஈழ­மக்கள் ஜன­நா­யக கட்சி, நவ­ச­ம­ச­மா­ஜக்­கட்சி உட்­பட மேலும் சில கட்­சி­கள் பங்­கேற்­றி­ருக்­க­வில்லை. இதன் கார­ணத்தால் சட்­ட­மூலம் தொடர்பாக இச்­சந்­திப்பின் போது இறு­தி­மு­டி­வெ­துவும் எடுக்­கப்­ப­ட­வில்லை. இச்­சந்­திப்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறு­கையில் இரட்டை வாக்குச் சீட்டை உள்­வாங்­க­வேண்டும் என்ற கோரிக்கை மறுக்­கப்­படும் பட்­சத்தில் அது பாரிய விளைவை சிறு­பான்­மை­யி­ன­ருக்கு ஏற்­ப­டுத்­தி­விடும். அவ்­வா­றான ஒரு சட்­ட­மூலம் கொண்­டு­வ­ரப்­ப­டு­மாயின் அது எமது அதி­ருப்­திக்­கு­ரி­ய­தா­கவே இருக்கும் என்றார். இந்­நி­லையில் எதிர்­வரும் தினங்­களில் மீண்டும் சிறு­பான்மை சிறு அர­சியல் கட்­சிகள் கலந்­து­ரை­யா­ட­வி­ருப்­ப­தாக தெரி­ய­ வ­ரு­கின்­றது. முன்­ன­தாக இறு­தி­யாக நடை­பெற்ற அமைச்­ச­ரவை கூட்­டத்தின் போது 20ஆவது திருத்­தச்­சட்ட மூலம் தொடர்­பாக அமைச்­சர்­க­ளான ரவூப் ஹக்கீம், பாட்­டலி சம்­பிக்க ரண­வக்க ஆகி­யோ­ரி­டையே இரட்டை வாக்­குச்­சீட்டை நடை­மு­றைப்­ப­டுத்­துவது தொடர்பில் கடு­மை­யான வாய்த்­தர்க்கம் இடம்­பெற்­றி­ருந்­தது. அதனைத் தொடர்ந்து மு.கா தலைமை, பிரதி செய­லாளர் ஆகி­யோரை மைய­மாக வைத்து ஜாதிக ஹெல உறு­மய கடுந்­தொ­னியில் கருத்­துக்­களை முன்­வைத்­த­துடன் இரட்டை வாக்­குச்­சீட்டை ஏற்­க­மு­டி­யாது எனவும் குறிப்பிட்டிருந்தது. மறுபுறத்தில் 20ஆவது திருத் தச்சட்டமூலம் தொடர்பாக ஜனா­தி­பதி தனது இறுதி முடிவை எடுப்பதற்காக கட்சிகளால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை ஆராய்வதற்காக குழுவொன்றை நியமித்திருந்தார். இந்நிலையில் வெகு விரைவில் குறித்த சட்ட மூலம் தொடர்பாக இறுதி முடிவை ஜனாதிபதி அறிவிப்பார் என அரச உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
20 ஆவது சட்டமூலம் தொடர்பில் சிறுபான்மை இன சிறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆராய்வு Reviewed by Author on June 03, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.