போதை மாத்திரைகள், நாணயத்தாள், கஞ்சா ஆகியவற்றுடன் மூவர் கைது-இருவர் பேசாலையை சேர்ந்தவர்கள்
யாழ்.காரைநகர் கடற்பகுதியில் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள், நாணயத்தாள் மற்றும் 35 கிலோ கஞ்சா ஆகியவற்றை கடத்தி வந்த இந்தியப் பிரஜை உட்பட 3 பேரை இலங்கை விசேட அதிரடி படையினர் மற்றும் கடற்படையினர் இணைந்து கைபற்றியுள்ளனர்.
இன்றைய தினம் அதிகாலை இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் தமிழகம் தங்கச்சி மடம் சூசைபுரம் பகுதியை சேர்ந்த லோறன்ஸ் மெரில் டன் (வயது 32) என்பவரும் மன்னார் பேசாலை பகுதியை சேர்ந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் 6 வகைப்பட்ட 411 பாலியல் உணர்வுகளை தூண்ட கூடிய மாத்திரைகள், பணம் அச்சிடுவதற்காக பயன்படுத்தப்படும் தாள்கள் மற்றும் 35 கிலோ கஞ்சா ஆகியன மீட்கப்பட்டுள்ளன.
மேலும் அவர்கள் பயன்படுத்திய ஒரு படகும் (டிங்கி படகு) மற்றும் 25 குதிரை வலு இயந்திரம் ஆகியனவும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதேவேளை கைது செய்யப்பட்ட மன்னார், பேசாலை பகு தியை சேர்ந்தவர்களில் ஒருவருக்கு 25 வயது எனவும் மற்றயவருக்கு 20 வயது எனவும் கூறப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பான விசார ணைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
காங்கேசன்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் எம்.ஏ.ஏ.ரஞ்சித் மாசிங்க, இளவாலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எம்.ஏ.ஆர். சேனாநாயக்க மற்றும் காங்கேசன்துறை உதவிப் பொலிஸ் அத்தியட்சர் டி.கே. பிரியந்த ஆகியோரின் வழிநடத்தலில் காங்கேசன்துறை விசேட போதையொழிப்பு பொலிஸாரினால் இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.
போதை மாத்திரைகள், நாணயத்தாள், கஞ்சா ஆகியவற்றுடன் மூவர் கைது-இருவர் பேசாலையை சேர்ந்தவர்கள்
Reviewed by NEWMANNAR
on
October 15, 2016
Rating:

No comments:
Post a Comment