இடிக்கப்பட்டு மீளக்கட்டப்பட்ட முள்ளிவாய்க்கால் தூபி திறக்கப்படுகிறது!
இதையடுத்து, அதனைக் கண்டித்து மாணவர்கள் போராட்டங்களை முன்னெடுத்ததுடன், மக்களின் எழுச்சி மற்றும் பன்னாட்டு ரீதியிலான கண்டனங்களைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை மீள அமைக்க பல்கலைக்கழக நிர்வாகம் இணங்கியது.
அத்துடன், பல்கலைக்கழக துணைவேந்தரினால் அடிக்கல் நாட்டப்பட்டதுடன் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் எனக் குறிப்பிடப்பட்ட பதாகை காட்சிப்படுத்தப்பட்டு நினைவுத் தூபியை மீள அமைக்கும் பணிகள் மாணவர்களின் பங்களிப்புடன் ஜனவரி 15ஆம் திகதி ஆரம்பமானது.
இந்நிலையில், அதன் கட்டுமானப் பணிகள் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், எதிர்வரும் 23ஆம் திகதி அதனைத் திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இடிக்கப்பட்டு மீளக்கட்டப்பட்ட முள்ளிவாய்க்கால் தூபி திறக்கப்படுகிறது!
Reviewed by Author
on
April 19, 2021
Rating:

No comments:
Post a Comment