மன்னார் சித்திவிநாயகர் இந்து கல்லூரி தேசிய பாடசாலையின் இந்த தொடர் வீழ்ச்சி நிலைக்கு யார் காரணம்?
மன்னார் மாவட்டத்தில் குறிப்பிட்ட சில வருடங்களுக்கு முன் கல்வி, ஒழுக்கம், விளையாட்டு என சாதித்து தனக்கெண ஒரு இடத்தை நிலை நிறுத்திய பாடசாலை மன்/சித்தி விநாயகர் இந்து கல்லூரி என்பதை யாரும் மறுக்க முடியாது.
பெயரில் இந்து கல்லூரியாக இருந்தாலும் அணைத்து இன மத மாணவர்களையும் அரவணைத்து கல்வியிலும் ஒழுக்கத்திலும் அவர்களை சிறந்த தலைமைத்துவ பண்புடன் சமூகத்துக்கு சிறந்த பிரஜைகளாக அனுப்பி வைத்த பாடசாலை என கூறுமளவுக்கு பொருத்தமான பாடசாலையாக இருந்தது.
ஆனால் இந்த நிலை தற்போது தலைகீழாக மாறியுள்ளது கல்வியிலும் விளையாட்டிலும் மன்னார் மாவட்டத்தில் உள்ள சில பின் தங்கிய பாடசாலைகளை கூட வெற்றியீட்டி சாதிக்க முடியாத நிலையில் இந்த பாடசாலை மாற்றம் பெற்றுள்ளது.
ஆண்டு தோறும் பல வைத்தியர்கள், பொறியளாலர்கள் உட்பட பலரை பல்கலைகழகம் அனுப்பி அழகு பார்த்த பாடசாலை தற்போது மாணவர்களை பரீட்சையில் கூட சித்தியடைய வைக்க தேவையான இயலுமை இன்றி காணப்படுகின்றது.
மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டிய ஆசிரியர்களே சக ஆசிரியர்கள் மாணவர்கள் மீது காழ்புணர்சியை கட்டவிழ்த்து விட்டுள்ள நிலயே தற்போது பாடசாலையில் காணப்படுகின்றது.
அது மாத்திரம் இல்லாமல் பாடசாலை நேரத்தில் வெளி வேலைகளை பார்கும் ஆசிரியர்கள்,பாடசாலை வரவில் கையொப்பம் இட்டுவிட்டு பாடசாலைக்கு சமூகமளிக்காத ஆசிரியர்கள்,பாட நேரங்களில் வேறு பாடசாலைகளில் கற்கும் தம் பிள்ளைகளை அழைத்து வருவதை தொடர்சியாக செய்து வரும் ஆசிரியர்கள் அதை கண்டும் காணமல் கடந்து செல்லும் வலய கல்வி பணிமனையும் என நிர்வாகத்தை கட்டமைக்க வேண்டிய ஆசிரியர்களை கட்டமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது மன்/சித்திவிநாயகர் இந்து கல்லூரியின் நிலை
இது ஒரு புறம் என்றால் மறுபுறம்
பாடசாலை சுற்றுப்புரம்,கழிவறை,வகுப்பறை என ஒரு கல்வி சூழழுக்கு பொருத்தமற்ற ஒரு கல்வி கூடமாக மன்/சித்திவிநாயகர் இந்து கல்லூரியின் நிலைமை மாறியுள்ளது
துப்பரவு ஊழியர் ஒருவர் இருக்கின்ற போதும் மலசல கூடம் உட்பட பாடசாலை சூழல் ஒரு குப்பைகளை களஞ்சியப்படுத்தும் இடத்தை விடவும் கேவலமாக காணப்படுவது வருத்ததுக்குறிய விடயம்
ஆபத்தான உடைந்து விலக்கூடிய நிலையில் கட்டிடம்,பயன்படுத்த முடியாத நிலையில் தளபாடங்கள்,பாடங்களுக்கு பிந்தி வரும் ஆசிரியர்கள்,நேர்த்தியாக உடை உடுத்தாத ஊழியர்கள்,களவாடப்பட்டுள்ள பாடசாலை தளபாடங்கள் என குற்றச்சாட்டுக்களால் நிறைந்துள்ளது சித்திவிநாயகர் இந்து கல்லூரியின் இன்றைய நிலை.
ஒரு பாடசாலையின் வீழ்ச்சிக்குக்கு அதன் நிர்வாகம், அதன் கட்டமைப்பு, ஆசிரியர்களே பொறுப்பு கூற வேண்டியவர்களாக இருந்தாலும் இவற்றை அவதானிக்க வேண்டிய வலய கல்வி பணிமனை அமைதி காப்பது வலயக்கல்வி பணிமனையில் செயற்திறனை சந்தேகிக்க வைக்கின்றது
தொடர்சியாக இவ்வாறான குறைபாடுகளுடனும், ஆசிரிய மாணவர்கள் பழைய மாணவர்கள் மத்தியில் முரண்பாடுகள் நிலவுகின்ற போதிலும் அவற்றில் தலையீடு செய்து இவற்றுக்கான தீர்வை பெற்று தர வலய கல்வி பணிமனை மற்றும் மேல் நிர்வாகங்கள் பின் நிற்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றது.
ஒரு அமைதியான சுத்தமான சூழல் இருந்தால் தான் ஒரு பிள்ளை மன நிறைவான கல்வியை பெற்று கொள்ள முடியும் ஆனால் தற்போது சித்திவிநாயகர் இந்து கல்லூரியில் அவ்வாறான நிலை காணப்படாமையினால் இப்பாடசாலை எல்லா துறைகளிலும் வீழ்சியை நோக்கி பயணித்து கொண்டிருக்கின்றது.
சிறு சிறு விடயங்களில் ஏற்படும் முரண்பாடுகளாலும் ஆசிரியர்களுக்கும் பழையமாணவர்களுக்கும் இடையில் ஏற்படும் அதிப்தி நிலையை பயன்படுத்தி
பழையமாணவர்களை பாடசாலை வாளகத்துக்குள் உள் நுழையவிடாமால் தடுக்கும் நடவடிக்கையில் பிரதி அதிபரும் மற்றும் சில ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்
பழைய மாணவர்கள்,புலம் பெயர்நாடுகளில் வசிக்கும் பலர் தங்கள் உழைப்பை கல்லூரியின் வளர்சிக்காக அன்பளிப்பு செய்தும் அவற்றையும் விணைத்திரணாக பயன்படுத்தாது யாரோ சிலர் அவற்றில் தனிப்பட்ட முறையில் பயன் பெறும் வகையில் செயற்படிகின்றது பாடசாலை நிர்வாகம்
பாடசாலைக்குள்ளே ஒரு குழு,மாணவர்களுக்கு பாடசாலை நேரங்களில் கல்வி நடவடிகையை மேற்கொள்ளாது மாலை நேர வகுப்புக்களை ஊக்குவிக்கும் சில ஆசிரியர்கள்,பாடசாலைக்கு சொந்தமான பொருட்களை திருடும் கும்பல்,ஆசிரியரின் பிள்ளையை பாடசாலை நேரத்தில் பராமரிக்கும் மாணவர்கள்,பயண்படுத்தவே முடியாத நிலையில் மலசல கூடங்கள்,
சுகாதார ஊழியர் ஒருவர் இருந்தும் கழிவறை அசுத்தம் காரணமாக சில மாணவர்கள் வீடு செல்லும் வரை காத்திருக்கிறார்கள் என்ற நிலைமை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது
சில வகுப்பறைகள் என சொல்ல முடியாத அளவுக்கு கீழ் மட்டத்தில் இருக்கும் இந்த பாடசாலை விரைவில் தனது பழைய நிலைக்கு மாற வேண்டும் என்பதே இந்த செய்தியின் நோக்கமே தவிர
இப் பாடசாலையினை மேலும் வீழ்த்துவது எமது நோக்கமல்ல
இந்த நிலைக்கு காரணாமான ஆசிரியர்கள் குற்றச்சாட்டுக்கலுடன் தொடர்புபட்ட விபரங்கள் பல இருக்கின்ற போதிலும் பொது நன்மை கருதி சிலவற்றை வெளிடாமலும் ,சில வற்றை பகுதியளவிலும் இந்த செய்தியில் இணைத்துள்ளோம்
இதன் பின்னரும் கட்டமைப்பு ரீதியான மாற்றங்கள் இடம் பெறாத பட்சத்திலோ அல்லது ஒரு மாணவனோ மாணவியோ கல்வி கற்ற உகந்த இடமாக அமையாமலோ கல்வி கற்பிக்கின்ற ஆசிரியர்கள் அர்பணிப்புடன் செயல்படாத இருந்தாலோ இந்த பாடசாலையின் எதிர்கால வளர்சியில் அக்கறை உள்ளவர்கள் என்ற அடிப்படையில் எம்மிடம் உள்ள ஆவணங்கள், குரல் பதிவுகள், உள்ளடங்களாக அணைத்தையும் ஆவணப்படுத்த வேண்டிய சூழல் உருவாகும்
சித்திவிநாகர் இந்து கல்லூரியின் வீழ்ச்சி என்பது தனி ஒரு பாடசாலையின் வீழ்ச்சியாக கருத முடியாது அதன் வீழ்ச்சி தற்போது ஒட்டு மொத்த மாவட்டத்தின் கல்வி சுட்டி யினை பின் நோக்கி கொண்டு சென்றுள்ளது
ஒரு மாவட்டத்தை தேசிய ரீதியில் அடையாளப்படுத்த வேண்டியது கல்வி மற்று விளையாட்டு இணைப்பாட விதான செயற்பாடுகள் ஆகும் அதை செய்ய வேண்டியது பாடசாலை அதை செய்ய வைக்க வேண்டியவர்கள் ஆசிரியர்கள் ஒரு சில அர்பணிப்பான ஆசிரியர்களால் மாத்திரமே இவற்றை செய்ய முடியாது
எனவே நீங்கள் மக்களின் வரிப்பணத்தை சம்பளமாக பெற்று பணியாற்றும் ஊழியர்கள் என்பதை அறிந்து உங்களை நம்பி ஒரு மாணவ சமுதாயமே உள்ளது என்பதை உணர்ந்து ஒரு சமூகத்தின் மாற்றத்துக்காக அர்பணிப்புடன் பணியாற்றுங்கள்
நல்ல முன்மாதிரியானவர்களாக இருங்கள் ஒரு பாடசாலையின் வீழ்சியை வளர்சியாக்க கூடிய சக்தி ஆசிரியர்களாகிய உங்களிடமே உள்ளது என்பதை மறந்து விடாதீர்கள் ஒரு ஆசிரியர் நினைத்தால் ஒரு மாணவனின் எதிர்காலத்தை என்னாவாகவும் மாற்றலாம்
நீங்கள் செய்யும் தவறு ஒரு வரலாற்று பிழையாக அமைந்து விடக்கூடாது என்பதற்காகவும் பாடசாலை வளர்சியில் அக்கறை கொண்ட ஒரு சமூக ஊடகமாகவும்
பொறுப்புடன் நியூ மன்னார்
Video
https://www.facebook.com/share/v/1CC82BFm8J/?mibextid=wwXIfr
நன்றி! Thank you
.jpg)
No comments:
Post a Comment