அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மறைமாவட்டத்தின் பேசாலை பங்கைச் சேர்ந்த 71 மாணவ மாணவிகளுக்கு உறுதிப்பூசுதல் என்னும் திருவருட்சாதனம் வழங்கி வைப்பு.

 மன்னார் மறைமாவட்டத்தின் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலய பங்கைச் சேர்ந்த  71  மாணவ மாணவிகளுக்கு இன்றைய தினம் சனிக்கிழமை (7) காலை  உறுதிப்பூசுதல் என்னும் திருவருட்சாதனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.


பேசாலை பங்குத்தந்தை அருட்தந்தை எஸ்.சத்தியராஜ் அடிகளார் ஏற்பாட்டில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகையினால் குறித்த திருவருட்சாதனம் வழங்கப்பட்டது.


 மன்னார் மறைமாவட்ட ஆயரின் தலைமையில் நடைபெற்ற கூட்டு திருப்பலியில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை தமிழ் நேசன் அடிகளார் , மறைமாவட்ட ஆயர் இல்ல நிதி பொறுப்பாளர் அருட்தந்தை சுரேந்திரன் றெவல் அடிகளார் , ஆகியோர்  கலந்து கொண்டு  கூட்டுத் திருப்பலி ஒப்புக் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.


















மன்னார் மறைமாவட்டத்தின் பேசாலை பங்கைச் சேர்ந்த 71 மாணவ மாணவிகளுக்கு உறுதிப்பூசுதல் என்னும் திருவருட்சாதனம் வழங்கி வைப்பு. Reviewed by Vijithan on June 08, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.