அண்மைய செய்திகள்

recent
-

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 2,944 பேர் பலி

நேற்றைய தினம் (26) நாட்டில் மேலும் 39 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். 12 பெண்களும் மற்றும் 27 ஆண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,944 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 252,257 ஆக அதிகரித்துள்ளது. இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களில் 218,998 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வௌியேறி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 2,944 பேர் பலி Reviewed by Author on June 27, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.