அண்மைய செய்திகள்

recent
-

பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா விற்ற நபர் கைது!

பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். ரத்மலானை பிரதேசத்தை சேர்ந்த 47 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் மோட்டார் சைக்கிளில் சென்று பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர். அதன்படி, தலவத்துகொட சாலிந்த திசாநாயக்க மாவத்தையில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

 அங்கு சந்தேகநபரிடம் இருந்து 122 கிராம் 710 மில்லிகிராம் கேரள கஞ்சாவும், இலத்திரனியல் தராசும் மற்றும் 13,500 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக தலங்கம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
\

பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா விற்ற நபர் கைது! Reviewed by Author on August 18, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.