அண்மைய செய்திகள்

recent
-

ரம்பா வீட்டில் ரூ.4.5 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை


தமிழ் திரையுலகில் 1990-களில் முன்னணி நாயகியாக இருந்தவர் நடிகை ரம்பா.

உள்ளத்தை அள்ளித்தா, சுந்தரபுருஷன், செங்கோட்டை, அருணாசலம், வி.ஐ.பி., காதலா காதலா, மின்சாரக் கண்ணா, ஆனந்தம் உட்பட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.

2010 இல் கனடா தொழில் அதிபர் இந்திரன் பத்மநாபனை திருமணம் செய்து கொண்டார். தற்போது கணவருடன் டொரண்டோவில் வசிக்கிறார்.

ரம்பாவுக்கு சென்னையிலும் ஐதராபாத்திலும் வீடுகள் உள்ளன. ஐதராபாத் வீட்டில் தனது நகைகளை பீரோவில் பூட்டி வைத்து இருந்தார். அந்த நகைகள்தான் மாயமாகியுள்ளன.

இந்த வீட்டில் ரம்பாவின் அண்ணன் வசிக்கிறார். அவர் வீட்டில் இல்லாதபோது நகை திருடுபோயுள்ளது.

இது குறித்து ரம்பாவின் சகோதரர் சீனிவாஸ் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். தனது மனைவி குடும்பத்தினர் நகைகளைத் திருடி இருக்கலாம் என சந்தேகிப்பதாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

திருடுபோன நகைகளின் மதிப்பு ரூ.4.5 கோடி என அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளா
ரம்பா வீட்டில் ரூ.4.5 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை Reviewed by NEWMANNAR on February 03, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.