அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தில் உள்ள 191 விளையாட்டுக்கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு.-Photos



தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நாடெங்கிலும் உள்ள விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் முகமாகவும்,இளைஞர்களின் விளையாட்டுத்துறையினை ஊக்குவிக்கும் முகமாகவும் நேற்று சனிக்கிழமை விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைத்தனர்.

இந்த நிலையில் மன்னார் மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் மன்னார் மாவட்டத்தில் உள்ள 191 இளைஞர் விளையாட்டுக்கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

மன்னார் மற்றும் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட 105 விளையாட்டுக்கழகங்களுக்கு விளையாட்டு உபகரணம் வழங்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை மதியம் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.இதன் போது இளைஞர்களின் தொழில் பயிற்சி,கலை கலாச்சாரம், போன்றவை கண்காட்சியாக காண்பிக்கப்பட்டது.

அதே வேளை மடு,நானாட்டன்,முசலி ஆகிய மூன்று பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட 86 விளையாட்டுக்கழகங்களுக்கு விளையாட்டு உபகரணம் வழங்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை மாலை சிலாபத்துறை பாடசாலை மைதானத்தில் இடம் பெற்றது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வன்னி மாகாண பணிப்பாளர் என்.எம்.முனவ்பர் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வுகளுக்கு பிரதம விருந்தினராக அமைச்சர் றிஸாட் பதியுதீன்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹீனைஸ் பாரூக்,வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்,முசலி பிரதேச சபை தலைவர் எம்.எஹியான்,மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் சேவை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைத்தனர்.

















மன்னார் மாவட்டத்தில் உள்ள 191 விளையாட்டுக்கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு.-Photos Reviewed by NEWMANNAR on May 03, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.