நடிகை மனோரமாவின் உடல் மயிலாப்பூர் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது
நடிகை மனோரமாவின் உடல் மயிலாப்பூர் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. நடிகை மனோரமா இறுதி ஊர்வலம் முக்கிய சாலைகளின் வழியே நடைபெற்றது. தி.நகரில் இருந்து புறப்பட்டு ஆர்.கே. சாலை வழியாக மயிலாப்பூர் நோக்கி சென்றது. மயிலாப்பூரில் உள்ள மயானத்தில் நடிகை மனோரமாவின் உடலை தகனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வழிநெடுகிலும் ஏராளமான பொதுமக்கள் மனோரமாவுக்கு அஞ்சலி செலுத்தினர். ஏராளமான திரையுலகினரும் மனோரமா இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றுள்ளனர்.
மக்கள் வெள்ளத்தினிடையே, மனோரமாவின் உடல் வைக்கப்பட்டுள்ள அலங்கார வண்டி மயிலாப்பூர் நோக்கி மெதுவாக வந்து கொண்டிருக்கிறது. சாலையின் இருபுறங்களிலும். ஆயிரக்கணக்கான மக்கள் கூடி. மனோரமாவிற்கு அஞ்சலி செலுத்தினர். இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஐஸ் அவுஸ் ஐ.ஜி. ஆபிஸ் பின்புறம் உள்ள கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டில் தகனம் செய்யப்படுகிறது. மகன் பூபதி சிதைக்கு தீ மூட்டுகிறார். மனோரமா மறைவையடுத்து சினிமா படப்பிடிப்புகள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
பிரபலங்கள் அஞ்சலி:
மனோரமா இறந்த செய்தி அறிந்து திரையுலகத்தை சேர்ந்த முன்னணி நடிகர்கள், நடிகைகள் முதல் திரையுலக கலைஞர்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலர் அவர் வீட்டுக்கு திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் , நடிகர் ரஜினிகாந்த்,டி.ராஜேந்தர் அஞ்சலி செலுத்தினார். அப்போது பேசிய அவர் நடிகை மனோரமா கலை உலகின் தாய் என்றும் சேலை கட்டிய சிவாஜி என்றும் புகழாரம் சூட்டினார். மேலும் பேசிய அவர் திரையுலகை ஆட்சி செய்து வந்தவர் ஆச்சி என கூறினார்.
மறைந்த நடிகை மனோரமாவின் உடலுக்கு நடிகர்கள் விஜய், சிம்பு, நிழல்கள் ரவி, நடிகர் ஜெய், வி.டி.வி கணேஷ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். மறைந்த மனோரமா உடலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா, நடிகர் அஜித்குமார், தேமுதிக தலைவர் விஜயகாந்த், நேரில் அஞ்சலி செலுத்தினார்.
நடிகை மனோரமாவின் உடல் மயிலாப்பூர் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது
Reviewed by NEWMANNAR
on
October 11, 2015
Rating:
No comments:
Post a Comment