அண்மைய செய்திகள்

recent
-

தமிழ்நாட்டில் 2 நாளில் ரூ. 250 கோடிக்கு மது விற்பனை!


தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி மே 14ம் திகதி முதல் 16ம் திகதி வரையும் மற்றும் மே 19ம் திகதியும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கடந்த 12 மற்றும் 13ம் திகதிகளில் தமிழகம்முழுவதும் மது விற்பனை இரண்டு முதல் மூன்று மடங்கு வரைஉயர்ந்துள்ளது.

சாதாரண நாட்களில் ரூ.60 முதல் 70 கோடிக்கு மது விற்பனை நடக்கும். ஆனால் 12ம் திகதி ரூ.100 கோடி வரையும்,13ம் திகதி ரூ.150கோடி வரையும் மது விற்பனை நடந்துள்ளது.

நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை 229 டாஸ்மாக் கடைகளில் சாதாரண நாட்களில் ரூ.2கோடி முதல் 2.25 கோடி வரை விற்பனையாகும் நிலையில், 12ம் திகதி ரூ.4கோடி வரையும், 13ம் திகதி ரூ.5 கோடியே 60 லட்சம் வரையும் மது விற்பனை ஜோராக நடந்துள்ளது.
தமிழ்நாட்டில் 2 நாளில் ரூ. 250 கோடிக்கு மது விற்பனை! Reviewed by Author on May 16, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.